Published : 29 Apr 2022 08:18 PM
Last Updated : 29 Apr 2022 08:18 PM

தமிழகத்தில் குறையும் கரோனா: புதிதாக 54 பேருக்கு பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 28, பெண்கள் 26 பெற என மொத்தம் 54 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 35 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,883 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 15,351 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 35 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 507 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 73 ஆகவும், சென்னையில் 44 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3,377 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x