காரை கணேசன் எனும் கள்ளமற்ற மனிதர்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 21

காரை கணேசன் எனும் கள்ளமற்ற மனிதர்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 21
Updated on
4 min read

நான் டப்​பிங் தொழிலுக்கு வந்​த​தில் இருந்து எனக்​குப் பழக்​க​மானவர் காரை கணேசண்​ணன். கருப்​பான உரு​வம். எப்​போதும் வேஷ்டி, சட்​டை. ஒரு சைக்​கிள். இது​தான் அவர் அடை​யாளம். மயி​லாப்​பூரில் ஆஞ்​சநேயர் கோயிலுக்கு அரு​கில் உள்ள தெரு​வில் குடி​யிருந்​தார்.

அவருக்கு 5 குழந்​தைகள். காலை​யிலேயே சைக்​கிளில் ஸ்டூடியோக்​களுக்கு கிளம்​பி​விடு​வார். ஒவ்​வொரு ஸ்டூடியோ​வாக சென்று வாய்ப்பு தேடு​வார். நாள் முழு​வதும் வேலை பார்த்​தால் நூறு ரூபாய் கிடைக்​கலாம். இதில் அவர், வீட்டு வாடகை கொடுக்க வேண்​டும். குழந்​தைகளுக்கு படிப்பு செலவை பார்க்க வேண்​டும். குடும்ப செல​வை​யும் ஓட்ட வேண்​டும். ஒரு கஷ்ட ஜீவனம் நடத்​திக் கொண்​டிருந்​தார்.

நான் அவரை அண்ணா என்று அழைப்​பேன். நகைச்​சுவை​யாக பேசுவ​தில் வல்​ல​வர். டைமிங் காமெடி என்​கிறார்​களே, அது அவருக்கு மிக​வும் இயல்​பாக வரும். அவர் இருக்​கும் இடம் எப்​போதும் கலகலப்​பாக இருக்​கும். எவ்​வளவு கஷ்டம் என்​றாலும் முகம் காட்​டிக் கொடுக்​காது. அவராக சொன்​னால்​தான் உண்​டு. தன்​னுடைய அனுபவங்​களை அவர் அதி​கம் கூறி​யிருக்​கிறார். ஒரு முறை அவர் தந்​தைக்கு பாம்பு கடித்த அனுபவத்தை சொன்​னார்.

காரைக்​குடி அரு​கில் உள்ள அவர் சொந்த ஊரில் இரவில் சாமான் வாங்​கு​வதற்​காக கடைக்​குச் சென்​றிருக்​கிறார், அவர் அப்​பா. அப்​போது ஏதோ ஒன்று காலை கடித்​திருக்​கிறது. வீட்​டுக்கு வந்​தால் உடல் முழு​வதும் மயிர்க்​கால்​களில் வியர்வை போல பொட்டு பொட்​டாக ரத்​தம். அதிர்ச்சி அடைந்த கணேசண்​ணன் உடனடி​யாக சைக்​கிளின் பின்​னால் அவரை அமர வைத்து நாட்டு வைத்​தி​யரிடம் கூட்​டிச் சென்​றிருக்​கிறார்.

பார்த்​து​விட்​டு, “ரத்​த​விரியன் பாம்பு கடிச்​சிருக்​கு” என்று வைத்​தி​யர் சொன்​ன​தாக கூறி​னார். அப்​படியொரு பாம்பு வகையை நான் கேள்​விப்​பட்​டதே இல்​லை. “கண்​ணாடி விரிய​னாக இருக்​கும்” என்​றேன். “இல்லை ரத்​த​விரியன்​தான்” என்​றார். பிறகு மருந்து கொடுத்து காப்​பாற்றி விட்​டார்​கள் அவரை. இப்​படி கேள்​விப்​ப​டாத பல விஷ​யங்​களை அவர் பேசு​வார்.

ஒரு நாள் டப்​பிங் தியேட்​டருக்கு வந்​தவர் இறைவனை திட்​டிக் கொண்​டிருந்​தார். “உன்​னைய கும்​பிட்டு எதுக்​கு? உன்​னைய ஏன்யா நான் கும்​பிட​ணும்?” என்று திட்​டிக்​கொண்​டிருந்​தார். “நான் என்​னண்​ணே, என்​னாச்​சு?” என்​றேன். “ஒண்​ணுமில்ல, போயா” என்​றார்.

பிறகு மீண்​டும் கேட்​கும்​போது, அப்​போது அதி​க​மாக டப்​பிங் படங்​கள் பண்​ணிக் கொண்​டிருந்த தயாரிப்​பாளர் ஒரு​வரின் பெயரைச் சொல்லி அவரைப் பார்த்​த​தாக சொன்​னார். “ரொம்ப கஷ்டமா இருக்​கு, ஏதாவது பார்த்து பண்​ணுங்​கன்னு கேட்​டேன். சரி, அடுத்த மாசம் ரெண்டு டப்​பிங் படம் ஆரம்​பிக்​கிறேன். 15 நாள் ஒரு படம், 15 நாள் இன்​னொரு படம்.

கூப்​பிடறேன்னு சொன்​னார். ஒரு நாளைக்கு 15 ரூபா கன்​வேயன்ஸ் கிடைச்​சா, ரெண்டு மாசம் குடும்​பத்தை ஓட்​டிரலாம்னு நினைச்​சேன்​யா! சரின்னு கிளம்​பும் போது ‘பிலிம் சேம்​பர்ல நம்ம படம் புரொஜக் ஷன் இருக்​கு, சாயங்​காலம் வந்​துரு கணேசன்னு அவர் கூப்​பிட்​டார். சரி, அடுத்த மாசம் வேலை கொடுக்க போற புண்​ணி​ய​வான், கூப்​பிடறாரேன்னு போயிட்​டேன். படம் முடிஞ்சு வெளிய வந்​தேன். அவர் நாலஞ்சு விநி​யோகஸ்​தர்​கள்​கிட்ட பேசிட்​டிருந்​தார்.

நான் அவர் கவனிக்​காத மாதிரி ஓரமா ஒதுங்கி போயிட்​டிருந்​தேன். அப்ப ‘இங்க வா கணே​சா”ன்னு கூப்​பிட்​டார். போனேன். ‘படம் எப்​டி​யிருக்​குன்னு சொல்​லவே இல்​லை​யே?’ என்று கேட்​டார். அங்​க​தான்யா என் வாயில சனி சம்​மணம் போட்டு உட்​கார்ந்​திருந்​தான். ‘என்​னைக் கூப்​பிட்டு படம் எப்​படி​யிருக்​குன்னு ஏன்யா அந்​தாளு கேட்​டாரு? நல்​லாருக்​கா, நல்​லா​யில்​லை​யான்னு திரும்​ப​வும் கேட்​டார்.

‘நல்லா இல்​லைனா நீங்க திட்​டு​வீங்க, நல்​லா​யிருக்​குன்னா ஆண்​ட​வன் திட்​டு​வான்? நான் என்ன பண்​றதுன்னு தெரியல’னு சொன்​னேன். அவ்​வளவு​தான். அடுத்த மாசம் இருக்​கிறதா சொன்ன இரண்டு பட வேலை​யும் எனக்கு இல்​லாம போச்​சு” என்​றார். அவருக்​குப் பொய் சொல்​லத் தெரி​யாது. வெள்​ளந்​தி​யான மனிதர்.

அப்​போது தேவ​நா​ராயணன் சார் என்று டப்​பிங் ரைட்​டர் இருந்​தார். அவர் குரூப்​பில் கணேசண்​ணன் வழக்​க​மாகப் பேசிக் கொண்​டிருந்​தார். ஒரு நாள், “தாஸ் அண்​ணன் கூப்​பிட்​டால் வரு​மானம் பரவா​யில்​லாம இருக்​கும்” என்று சொன்​னார்.

தாஸ் அண்​ணன் என்று அவர் சொன்​னது பிரபல வசனகர்த்தா ஆரூர்​தாஸ் ஐயா​வை. பிறகு அவரிடம் பலநாள் கேட்​டு, ஆரூர்​தாஸ் ஐயா ஒரு​நாள் வரச் சொல்​லி​விட்​டார். ‘அப்​பாடா ஆண்​ட​வன் கண்​ணைத் திறந்​துட்​டான்​யா!’என்று சந்​தோஷப்​பட்​டார். அன்​று, சுரேஷ் மகாலில் டப்​பிங். கணேசண்​ணனும் வந்​து​விட்​டார்.

நாங்​கள் ஆரம்​ப​காலத்​தில் குரூப் வாய்ஸ் பேசுவது, பிட் வாய்ஸ் கொடுப்​ப​தைத்​தான் செய்​து​கொண்​டிருந்​தோம். ஒரு 25 டப்​பிங் ஆர்​டிஸ்ட் இருப்​போம். எங்​கள் எல்​லோருக்​குள்​ளும் அரு​மை​யான உறவு இருந்​தது. முறை சொல்லி அழைத்​துக்​கொள்​வோம். ஆண், பெண் எல்​லோரும் மகிழ்ச்​சி​யாக இருப்​போம்.

சாயங்​காலம் ஆறு மணி வரை டப்​பிங் என்று சொல்​லி​விட்​டார்​கள். திடீர் என்று தேவ​நா​ராயணன் மகன் மோகன் போன் செய்​து, “மாலை ஆறு மணிக்கு ஆனந்த் ஹவுஸில் டப்​பிங். வந்​துருங்க” என்று சொன்​னார் கணேசண்​ணனிடம். இதைக் கேட்​டதும் அவருக்​குச் சந்​தோஷம்.

ஆறு மணிக்கு இங்கு முடிந்​தால், 15 ரூபாய் கன்​வேயன்ஸ் கிடைக்​கும். பிறகு அங்கு சென்​றால் 15 ரூபாய் கன்​வேயன்ஸ் கிடைக்​கும். 30 ரூபாய் கிடைத்​தால் மகிழ்ச்சி என்று நினைத்​துக்​கொண்​டார். இப்​போது ஆரூர்​தாஸ் ஐயா கம்​பெனி​யில் 9 மணி வரை டப்​பிங் என்று சொல்​லி​விட்​டார்​கள். இதைக் கேள்​விப்​பட்​டதும் அவருக்கு ஒரு மாதிரி​யாகி​விட்​டது. உடனே இறைவனைத் திட்ட ஆரம்​பித்து விட்​டார்.

பிறகு தேவ​நா​ராயணன் சார் மகன் மோக​னுக்கு போன் பண்​ணி, “9 மணிக்கு மேல் வரு​கிறேன்” என்று சொன்​னார், அவர் கேட்​க​வில்​லை. கண்​டிப்​பாக 6 மணிக்கு வரச் சொல்லி விட்​டார்.

இதனால் ஆருர்​தாஸ் டப்​பிங்​கில் இருந்து 6 மணிக்கு அங்கு சென்று விட்​டார். 6 மணிக்கு மேல் குரூப் சவுண்ட் கொடுப்​ப​தற்கு எல்​லோரை​யும் அழைத்​தார்​கள். கணேசண்​ணன் இல்​லை. “அவர் எங்​கே?” என்று கேட்​டதும் விஷ​யத்​தைச் சொன்​னார்​கள். “இனிமேல் அவரைக் கூப்​பிட வேண்​டாம்” என்று சொல்​லி​விட்​டார் ஆருர்​தாஸ்.

பிறகு நாங்​கள், ‘ஜீசஸ் ஆஃப் நாசரேத்’ டெலிபிலி​முக்​காக டப்​பிங் பேசச் சென்​றிருந்​தோம். அங்கு கணேசண்​ணன் வந்​திருந்​தார். அப்​போது அவரிடம் ஒரு​வர், “தாஸ் அண்​ணன் கம்​பெனி​யில உங்​களுக்​குப் பிரச்​சினை​யா? கூப்​பிடற​தில்​லை​யாமே?” என்று கேட்​டார்.

“தாஸ் அண்​ணன் கூப்​பிடலைன்னா என்ன? ஏசண்​ணேன் கூப்​டிருக்​கார்ல, போயா” என்று டைமிங்​காகச் சொன்​னார். எல்​லோரும் சிரித்​து​விட்​டோம். வைர​முத்து சார் டப்​பிங் படங்​கள் பண்​ணிக் கொண்​டிருந்​த​போது, கணேசண்​ணன் ஒருங்​கிணைப்​பாள​ராக பணி​யாற்​றி​னார். அப்​போது யாரோ ஒரு​வர், ஒரு டப்​பிங் ஆர்ட்​டிஸ்ட்டை வைர​முத்​து​விடம் பரிந்​துரை செய்​திருக்​கிறார்.

அவரின் பெயரைச் சொல்​லி, ‘ஆள் எப்​படி?’ என்று கணேசனிடம் கேட்​டிருக்​கிறார். ‘நல்ல மனுஷன்’ என்று சொல்​லி​யிருக்​கிறார் கணேசண்​ணன். உடனே அவரை கூப்​பிட்டு டப்​பிங் பேசச் சொல்லி இருக்​கிறார்​கள். ஆனால் அவர் சரி​யாக பேச​வில்​லை. பலமுறை எடுத்​துப் பார்த்​தும் சரி​யில்​லை.

“என்ன கணேசன், நல்ல மனுஷன்னு சொன்​னீங்​க?” என்று வைர​முத்து கேட்​டார். “இப்​ப​வும் சொல்​றேன், நல்ல மனுஷன்​னு​தான் சொன்​னேன், நல்லா பேசு​வாருன்னு சொல்​லவே இல்​லியே” என்று சொன்​னார் அவர். இப்​படி ஜாலி​யாக இருக்​கும் அவருக்கு இரண்டு சிறுநீரகங்​களும் திடீரென செயலிழந்து விட்​டன! அடை​யாறு அருகே உள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் அவரை சேர்த்​திருந்​தார்​கள்.

அவரை பார்க்க இன்​னொரு டப்​பிங் இன்​சார்ஜ் ஆன லட்​சுமணன் சென்​றார். அங்​கிருந்த நர்​ஸ், “யாருங்க நீங்க? அவருக்கு சாப்​பிடறதுக்கு எது​வும் கொடுக்​கக் கூடாது. வேணும்னா இட்லி மட்​டும் கொடுங்க” என்று சொல்லி விட்​டார்! இவர் போய் வெறும் நான்கு இட்​லியை மட்​டும் வாங்கி வந்து கொடுத்து விட்டு சென்று விட்​டார்! கணேசண்​ணன், பார்​சலைப் பிரித்​தார், உள்ளே சட்​னி, சாம்​பார் எது​வம் இல்​லை.

அப்​போது கிட்னி மாற்று அறுவை சிகிச்​சைக்​காக ஒரு புரோக்​கர் அவரை வந்து பார்த்​தார். “அண்ணே உங்​களுக்கு கிட்னி கொடுக்க ஆள் ரெடி, வேலூரில் ஆபரேஷன் பண்​ணணும்.

உங்​களுக்கு கிட்னி கிடைச்​சிரும். 25 ஆயிரம் ரூபாய் இருந்தா பிரச்​சினை முடிஞ்​சிரும்” என்று பேரம் பேசி​னார். அப்​போது, “யோவ், இட்​லிக்கு சட்னி வாங்​கவே முடி​யாம இருக்​கேன். இந்த நேரத்​துல வந்து கிட்​னிக்​கு, 25 ஆயிரம் ரூபா கேட்​கிறே?” என்று கிண்​டலாகச் சொன்​னார்.

இப்​படி எப்​போதும் ஜாலி​யாக பேசிக் கொண்​டிருந்​தவர் பிறகு கால​மாகி விட்​டார்​. அவர்​ மறைவு என்​னால்​ மறக்​க முடி​யாதது. என்​னுடைய நகைச்​சுவை நடிப்​பு மேம்​படுவதற்​கு அவரும்​ முக்​கிய​மான ​காரணம்​.

(திங்கள்தோறும் பேசுவோம்)

காரை கணேசன் எனும் கள்ளமற்ற மனிதர்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 21
மச்சான் மயில்சாமி - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 20

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in