‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் பாடிய ‘செல்ல மகளே...’ பாடல் எப்படி?

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் பாடிய ‘செல்ல மகளே...’ பாடல் எப்படி?
Updated on
1 min read

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் 3-வது சிங்கிளான 'செல்ல மகளே...' பாடல் இன்று (டிச.26) வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய் தீவிர அரசியல் களம் கண்டுள்ள நிலையில், இது அவர் நடிக்கும் கடைசி படம் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான ‘தளபதி கச்சேரி’, 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் 3-வது பாடல் 'செல்ல மகளே...' இன்று (டிச.26) வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியுள்ள நிலையில், விஜய் இந்தப் பாடலை பாடியுள்ளார். ‘கண்ணே மணியே கண்ணிமையே... என் கைக்குள்ள மலர்ந்தவளே...’ என ஒரு தந்தை தனது மகளுக்காக மனமுருகி பாடியுள்ள விதத்தில் சாஃப்ட் டோனில் இந்த வரிகள் அமைந்துள்ளது.

மேலும், ‘எந்தன் நெஞ்சில் குடியிருக்கும் நான் ஈன்றாத ...’ என விஜய்யின் அரசியல் டேக் லைனுடன் இப்பாடல் முடிகிறது. விஜய் மனமுருகி பாடியிருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் பாடிய ‘செல்ல மகளே...’ பாடல் எப்படி?
“ஜென்ஸீ தலைமுறையினரின் திறன்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in