Last Updated : 11 Jul, 2019 01:11 PM

 

Published : 11 Jul 2019 01:11 PM
Last Updated : 11 Jul 2019 01:11 PM

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் மித்ரன்

காவல்துறை அதிகாரியாக சண்முக பாண்டியன் நடித்து வரும் புதிய படத்துக்கு 'மித்ரன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். அதனைத் தொடர்ந்து 'மதுர வீரன்' படத்தில் நடித்தார். இரண்டு படங்களுக்குமே வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் பெரிதாக சோபிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து புதிய படமொன்றில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார். 'விஸ்வாசம்' இயக்குநர் சிவாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு 'மித்ரன்' எனத் தலைப்பிட்டுள்ளனர். தலைப்புக் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நாயகியாக ரோனிகா சிங், வம்சி கிருஷ்ணா, அர்ச்சனா, முனீஸ்காந்த், அழகம் பெருமாள் ஆகியோர் சண்முக பாண்டியனுடன் நடித்து வருகிறார்கள். எடிட்டராக ரூபன் பணிபுரியவுள்ளார். இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக சண்முக பாண்டியன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக, “தமிழ்த் திரையுலகில் போலீஸ் படங்கள் வரிசையில் எப்படி விஜயகாந்த் படங்கள் இடம்பெற்றுள்ளதோ, அந்த வரிசையில் இந்தப் படமும் இருக்கும்” என்று இயக்குநர் பூபாலன் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த படமுமே காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதியிலேயே படமாக்கி வருகிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x