Published : 14 Jun 2016 12:30 PM
Last Updated : 14 Jun 2016 12:30 PM
சுந்தர்.சி படம் மற்றும் 'சென்னை 28' 2-ம் பாகத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தேனாண்டாள் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகள் உருவாக இருக்கிறது. இப்படத்துக்கு நாயகன் மற்றும் நாயகி தேர்வுப் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் நாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு சூர்யா தரப்போ, "எந்த ஒரு செய்தியையும் நம்பாதீர்கள். ஒரு படம் ஒப்பந்தமாவதற்கு முன் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள் " என்று தெரிவித்திருக்கிறார்கள்.
குஷ்பு "இதுவரை எந்த நடிகரும் முடிவாகவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
சுந்தர்.சியின் படம் மட்டுமன்றி, 'சென்னை 28' 2-ம் பாகத்திலும் வெங்கட்பிரபு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூர்யா கவுரவ கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இது குறித்து 'சென்னை 28' 2-ம் பாகம் படக்குழுவிடம் கேட்டபோது, "இது எங்களுக்கே புதுமையான செய்தி. அப்படி எந்த ஒரு ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்கள்.
தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சிங்கம் 3' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT