

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஜூலை 15ம் தேதி முதல் தொடங்க இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால், நடிகர்களின் தேதிகள் பிரச்சினை காரணமாக அப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அப்படம் ஆரம்பிக்கும் முன்பு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் பார்த்திபன், சூரி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்துக்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார்.
இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் வசனங்களை பாடலாசிரியர் யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
விஷ்ணு விஷால் படம் குறித்து சுசீந்திரன் பேசியிருக்கும் வீடியோ பதிவு: