Last Updated : 09 Mar, 2018 12:22 PM

 

Published : 09 Mar 2018 12:22 PM
Last Updated : 09 Mar 2018 12:22 PM

“என்னையோ அல்லது ஜூலியையோ கிண்டலடித்தால் போலீஸில் புகார் செய்வேன்” – காயத்ரி ரகுராம்

‘என்னையோ, ஜூலியையோ கிண்டலடித்தால் போலீஸில் புகார் செய்வேன்’ என ‘பிக் பாஸ்’புகழ் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

நடன இயக்குநர், நடிகை என இரண்டு முகங்கள் கொண்டவர் காயத்ரி ரகுராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவரை ‘அக்கா… அக்கா…’ என ஜூலி பாசத்துடன் அழைப்பார். ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா ஆர்மியின் கோபத்துக்கு இவர்கள் ஆளானார்கள்.

இந்நிலையில், ‘என்னைப் பற்றியோ, ஜூலியைப் பற்றியோ கிண்டலடித்தால் போலீஸில் புகார் செய்வேன்’ என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம். நேற்று வெளியிட்ட ட்வீட்டில், “சமூக வலைதளங்களில் கிண்டலடிப்பது, கெட்ட வார்த்தை பயன்படுத்தி திட்டுவது போன்றவை இன்றே முடிவுக்கு வரவேண்டும். இல்லையென்றால், போலீஸில் புகார்செய்து உங்களைக் கண்டுபிடிப்பேன்.

அது தனிநபராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி. என்னைப் பற்றியோ அல்லது ஜூலியைப் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியோ இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x