அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வரவேற்பை பெற்றது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

‘கோப்ரா’ படத்துக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விஜய் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in