படப்​பிடிப்பு தளத்​தில் திருட்டு முயற்சி: ராஷி கன்னா தரப்பு விளக்கம்

படப்​பிடிப்பு தளத்​தில் திருட்டு முயற்சி: ராஷி கன்னா தரப்பு விளக்கம்
Updated on
1 min read

நடிகை ராஷி கன்​னா, தமிழ், தெலுங்​கு, இந்தி படங்​களில் நடித்து வரு​கிறார். இவர் இப்​போது புதிய இந்​திப் படம் ஒன்​றில் நடிக்கிறார். இதன் படப்​பிடிப்பு மும்​பை​யில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடை​பெற்று வரு​கிறது.

அங்கு அவர் தங்கி இருந்த கேர​வனில் அவருடைய கைப்​பை​யில் இருந்து ரூ.50 ஆயிரத்தை ஒரு​வர் திருட முயன்​றுள்​ளார். அவரை படப்​பிடிப்​புத் தளத்​தில் இருந்த பாது​காப்​புக் குழு​வினர் கையும் களவு​மாக பிடித்​தனர். அவர் கேர​வன் ஊழியர் என்​பது தெரியவந்தது.

பின்​னர் படப்​பிடிப்​புத் தளத்​தில் இருந்து அவரை வெளி​யேற்​றினர். இச்​சம்​பவம் படப்​பிடிப்பு தளத்​தில் நடிகைகளுக்​கான பாது​காப்பு குறித்து கேள்​வியை எழுப்பியுள்​ளது. இந்​நிலை​யில் இது பற்றி நடிகை ராஷி கன்னா தரப்பு விளக்​கம் அளித்​துள்​ளது. அந்​தப் பணம் அவருடையது அல்ல என்​றும் அவருடைய மானேஜர் பணம் என்​றும் விளக்​கம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

படப்​பிடிப்பு தளத்​தில் திருட்டு முயற்சி: ராஷி கன்னா தரப்பு விளக்கம்
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in