“உலக இசை அரங்கில் சாதிக்கும் இந்திய கலைஞர்கள்” - சங்கர் மகாதேவன் பெருமிதம்

பாடகரும் இசை அமைப்பாளரு​மான சங்​கர் மகா தேவன்

பாடகரும் இசை அமைப்பாளரு​மான சங்​கர் மகா தேவன்

Updated on
1 min read

உலக அளவில் இந்​திய இசை பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்தி வருவதாகப் பாடகரும் இசை அமைப்​பாள​ரு​மான சங்​கர் மகா தேவன் கூறி​யுள்​ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்திய இசை இன்று உலகம் முழு​வதும் அதிக வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. இந்​திய கலைஞர்​கள் சர்​வ​தேச இசை மேடைகளில் தங்​களது திறமை​களை வெளிப்​படுத்தி புதிய உயரங்​களை எட்​டி​யுள்​ளனர். இந்​தியா வேக​மாக முன்​னேறி வரும் நிலை​யில், தற்​போது உலகமே நம்மை உற்​று​நோக்கி வரு​கிறது.

மொபைல் போன் மூல​மாகவே உலக இசையை ஒரே கிளிக்​கில் கேட்க முடிகிறது. அதே​போல், நமது இசை​யும் உலக மக்​களின் கைபேசிகளை எளி​தாகச் சென்​றடைவ​தால், ஆயிரக்​கணக்​கான ஆண்​டு​கள் பழமை​யான நமது இசை மரபின் கலா​சா​ரம் மற்​றும் அதன் மகத்​து​வத்தை அவர்​கள் தற்​போது புரிந்​து​கொள்​ளத் தொடங்​கி​யுள்​ளனர்.

பாரம்​பரிய இசை​யும், செயற்கை நுண்​ணறிவு உள்​ளிட்ட நவீன தொழில் ​நுட்​பங்​களும் இணை​யும் போது மிக​வும் சக்​தி ​வாய்ந்த கூட்​ட​ணி​யாக மாறி, பெரிய சாதனை​களை உரு​வாக்​கு​கிறது. தற்போது உலகள​வில் மிகப்​பெரிய இசைக் கூட்​ட​ணி​கள் உருவாகி வரு​கின்​றன.

பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த கலைஞர்​களு​டன் எங்​கள் ‘சக்​தி’ இசைக் ​குழு மேற்​கொண்ட பயண​மும், அதற்கு கிடைத்த சர்வதேச விருதுகள் மற்​றும் அங்​கீ​காரங்​களும் சிறந்த எடுத்துக்காட்​டு. வரும் காலங்​களில் இந்​தி​யர்​கள் பல சர்​வ​தேச விருதுகளை வெல்​வார்​கள் என்​ப​தில் எனக்கு முழு நம்​பிக்கை உள்ளது. இவ்​வாறு சங்​கர் மகாதேவன்​ கூறி​னார்​.

<div class="paragraphs"><p><em>பாடகரும் இசை அமைப்பாளரு​மான சங்​கர் மகா தேவன்</em></p></div>
Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 22

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in