Published : 28 Sep 2017 03:02 PM
Last Updated : 28 Sep 2017 03:02 PM

மறைந்த நடிகர் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது: குஷ்பு சாடல்

மறைந்த நடிகர் சிவாஜியை தமிழக அரசு அவமானப்படுத்துகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில்  குஷ்பு கடுமையாக சாடியுள்ளார்

அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அவரது பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். இவ்விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நடிகர் திலகத்தை தமிழ்நாடு அரசு அவமானப்படுத்துகிறது. இந்தியத் திரையுலகத்திற்கு, முக்கியமாக தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த மேதை அவர். தமிழக முதல்வரே..  துணை முதல்வரே.. தமிழக அரசே.. உங்களுக்கு மேதைகளை மதிக்கத் தெரியாவிட்டால், நடிகர் திலகத்தை அவமானப்படுத்தி உங்கள் அதிகார அணுகுமுறையை காட்டாதீர்கள்..

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x