Published : 25 Apr 2023 03:27 PM
Last Updated : 25 Apr 2023 03:27 PM

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பரியேறும் பெருமாள்’?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், இதனை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் சாதிய கோரத்தை கண்முன் நிறுத்தியது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்ற இப்படம் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான கரண் ஜோஹர் இப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் கதிர் கதாபாத்திரத்தில் சித்தாந்த் சதுர்வேதியும், கயல் ஆனந்தி கதாபாத்திரத்தில் திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் உறுதியாகும் பட்சத்தில் ஜூலைக்குப் பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கரண் ஜோஹரை பொறுத்தவரை அவர் ரன்வீர் சிங் மற்றும் அலியா பட்டை வைத்து ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x