Last Updated : 23 Sep, 2017 02:49 PM

 

Published : 23 Sep 2017 02:49 PM
Last Updated : 23 Sep 2017 02:49 PM

நாயகியை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையில் வரலெட்சுமி ஒப்பந்தம்

முழுக்க நாயகியை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையில் வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

வரலெட்சுமி நடித்துள்ள 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் ட்ரெய்லருக்கு சமூகவலை தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், 'சண்டக்கோழி 2' படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகிவுள்ளார்.

தற்போது மிஷ்கினிடம் முதன்மை உதவி இயக்குநராக பணிபுரிந்த ப்ரியதர்ஷினி இயக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் வரலெட்சுமி. இப்படம் முழுக்க நாயகியை மையப்படுத்தி உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாகும்.

கலை இயக்குநராக ராமலிங்கம், ஒளிப்பதிவாளராக பாலாஜி ரங்கா, இசையமைப்பாளராக சாம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சரண்யா லூயிஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x