Published : 12 Aug 2017 11:53 AM
Last Updated : 12 Aug 2017 11:53 AM
'பிக் பாஸ்' வீட்டுக்குள் போகவுள்ளார் என்று வெளியான செய்திக்கு ப்ரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் நீக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், புதிதாக ஒருவரும் சேர்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் நடிகை பிந்து மாதவி 'பிக் பாஸ்' வீட்டுக்குள் போட்டியாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.
பிந்து மாதவியைப் போலவே இந்த வாரம் ப்ரியா பவானி சங்கர் சேர்க்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகின. இச்செய்திக்கு ப்ரியா பவானி சங்கர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
என்னது பிக் பாஸ் வீட்டுக்கு போறேனா. என் வீட்டிலேயே என்னால் 10 நாட்கள் சும்மா இருக்க முடியாது. இந்த பதிவு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே. இந்த வாரம் போகப் போவது நானல்ல. உங்களது அன்புக்கு நன்றி
இவ்வாறு ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் ப்ரியா பவானி சங்கர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேயாத மான்' படத்தின் நாயகியாக நடித்து திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT