Published : 26 Oct 2016 08:29 AM
Last Updated : 26 Oct 2016 08:29 AM

கணவருடன் சேர்ந்து வாழ நடிகை ரம்பா விருப்பம்: குடும்பநல நீதிமன்றத்தில் மனு

கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக 1990-களில் வலம்வந்தவர் நடிகை ரம்பா. ‘உள்ளத்தை அள்ளித்தா’ , ’நினைத் தேன் வந்தாய்’, காதலா காதலா’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். இவருக்கும் கனடாவைச் சேர்ந்த இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் பிரகாரம் தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரியும் சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 3-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x