Last Updated : 22 Oct, 2016 06:40 PM

 

Published : 22 Oct 2016 06:40 PM
Last Updated : 22 Oct 2016 06:40 PM

விஜய் சேதுபதிக்கு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம்

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பிரேம் குமார். அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தியே பாலாஜி தரணிதரன் அக்கதையை உருவாக்கி இருந்தார்.

தற்போது பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். அக்கதையில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. தற்போது இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது படக்குழு. அடுத்தாண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. தீபாவளியன்று முறையாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x