Published : 06 Jul 2022 02:08 AM
Last Updated : 06 Jul 2022 02:08 AM

மீண்டும் படங்களை தயாரிக்கும் முடிவில் தனுஷ்?

நடிகர் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் பழையபடி மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'எதிர் நீச்சல்' படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் நடிகர் தனுஷ். இதையடுத்து தனது 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் 'வேலையில்லா பட்டதாரி', 'காக்கி சட்டை', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'நானும் ரௌடிதான்', 'விஐபி 2', 'வடசென்னை', 'மாரி 2' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இதனிடையே தனுஷின் தயாரிப்பு நிறுவனமான 'வொண்டர்பார்' திடீரென படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது. இதனால் ரசிகர்களின் பேவரைட்டான தனுஷ் - அனிருத் காம்போ இல்லாமல் போனது. மீண்டும் அவர்கள் கூட்டணி குறித்து அவ்வப்போது பேச்சுக்கள் எழுந்துவந்தன. 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களை முடித்த தனுஷ் அடுத்தடுத்ததாக 'சாணிகாயிதம்' அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்', தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் 'வாத்தி', சத்யஜோதி ஃபிலிம்ஸுக்காக மேலும் ஒரு படம் என கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது தனுஷ் மீண்டும் தனது தயாரிப்பிலேயே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலே சொன்னே படங்கள் அனைத்தும் பிற நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் கமிட்மென்ட் முடிந்தவுடன் 'வொண்டர்பார் ' சார்பில் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் என்றும், அதில் ஒன்று 'பியார் பிரேமா காதல்' இளன் இயக்கத்தில் ஒரு படம் என்றும், மற்றொன்று சொந்த இயக்கத்திலேயே ஒரு படம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x