Published : 20 Jun 2022 04:04 PM
Last Updated : 20 Jun 2022 04:04 PM

வெளிநாட்டு பின்னணியில் உருவாகும் ‘புஷ்பா 2’ 

'புஷ்பா 2' திரைப்படம் வெளிநாட்டு பின்னணியில் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'புஷ்பா'. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த இந்தப் படத்தில் பஹத் பாசில் கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி, பிரம்மாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்த இந்தப்படத்தில், 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் வெளிநாடுகளை பின்னணியாக கொண்டு பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரம் தொடங்கும் என கூறப்படுகிறது.

செம்மரக் கடத்தல் தாதாவாக மாறும் புஷ்பா, வெளிநாடுகளில் தன் ஆதிக்கத்தை எப்படி செயல்படுத்துகிறார் என்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்காக சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். 'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகா தவிர இன்னொரு நாயகியும் நடிக்க இருக்கிறார். பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x