Published : 17 May 2016 03:28 PM
Last Updated : 17 May 2016 03:28 PM
தனியார் பேருந்து ஒன்றில் 'மனிதன்' திரையிடப்பட்ட தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது.
திருட்டு டி.வி.டி தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்ச்சியாக பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் 'தெறி' படத்தை திரையிட்ட தனியார் பேருந்து ஒன்றை மடக்கி, திரையிட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தில் ‘மனிதன்’ ஒளிபரப்பப்படுவதாக செயலாளர் விஷாலுக்கு, பேருந்து பயணி ஒருவர் தெரியப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து விஷால் மற்றும் கார்த்தி ஆகியோரின் புகாரின் அடிப்படையில், ஸ்ரீமன் மேற்பார்வையில் மதுரவாயலில் தனியார் பேருந்தை மடக்கினார்கள். மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT