Last Updated : 21 Apr, 2016 03:06 PM

 

Published : 21 Apr 2016 03:06 PM
Last Updated : 21 Apr 2016 03:06 PM

சங்கத்துக்குள் இருந்தபடி போராட சிம்புவுக்கு ராதிகா அறிவுரை

நடிகர் சங்கத்தில் இருந்துக் கொண்டே போராட வேண்டும், விலகக் கூடாது என்று சிம்புவுக்கு ராதிகா சரத்குமார் அறிவுரை தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் இருந்து கொண்டு பொருளாளர் பதவிக்கு போட்டியிட்டார் சிம்பு. ஆனால் தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்தின் விழாக்கள், நட்சத்திர கிரிக்கெட் போட்டி உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்விலும் சிம்பு கலந்து கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக, நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சிம்பு. நடிகர் சங்க உறுப்பினர்கள் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகுவதற்கான காரணத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், ராதிகா சரத்குமார் நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து "ஒரு மூத்த நடிகரின் அறிவுரை இது. நடிகர் சங்கத்தை விட்டு வெளியேற வேண்டாம். நடிகர் சங்கத்துக்கு என் தந்தை, எனது குடும்பம் மற்றும் உங்கள் தந்தையின் பங்களிப்பு விலை மதிக்க முடியாதது.

சங்கத்தில் இருந்து கொண்டே உங்கள் உரிமைகளுக்காக போராடுங்கள். நடிகர் சங்கம் அவர்களுடைய சொத்து அல்ல. அது அனைத்து நடிகர்களுக்குமான கட்டமைப்பு. எனவே, உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யவும்" என்று தெரிவித்திருக்கிறார் ராதிகா சரத்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x