Last Updated : 19 Apr, 2016 04:42 PM

 

Published : 19 Apr 2016 04:42 PM
Last Updated : 19 Apr 2016 04:42 PM

மணிரத்னம் படத்தில் சாய் பல்லவி இல்லை!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சாய் பல்லவி நடிக்கவில்லை.

'தோழா' படத்தைத் தொடர்ந்து 'காஷ்மோரா' படத்தில் நடித்துவரும் கார்த்தி, தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் வெளிநாடுவாழ் இந்தியராகவும், பைலட் வேலையில் இருப்பவராகவும் கார்த்தி நடிக்கிறார். இப்படத்தின் நாயகி வேடத்திற்காக சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்யும் முடிவில் படக்குழு இருந்தது.

ஆனால், கதைப்படி இன்னும் கொஞ்சம் வயதானவராக இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி இருக்கிறார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஆதித்யா ராவ் என்ற நாயகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'காஷ்மோரா' படத்துக்காக மொட்டையடித்துள்ள கார்த்தி, முடி வளர்ந்த பின் மணிரத்னம் பட படப்பிடிப்பில் இணைவார் எனத் தெரிகிறது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x