Published : 05 Apr 2016 09:57 AM
Last Updated : 05 Apr 2016 09:57 AM
நடிகர் சங்கக் கட்டிடத்துக்காக நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நட்சத்திர கிரிக்கெட்’ போட்டி அணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சிங்கம்ஸ்’ அணிக்கான கேப்டனாக சூர்யா, ‘மதுரை காளைஸ்' அணிக்கான கேப்டனாக விஷால், ‘கோவை கிங்ஸ்' அணிக்கான கேப்டனாக கார்த்தி, ‘நெல்லை டிராகன்ஸ்’ அணிக்கான கேப்டனாக ஜெயம்ரவி, ‘ராம்நாட் ரைனோஸ்' அணிக்கான கேப்டனாக விஜய் சேதுபதி, “தஞ்சை வாரியர்ஸ்” அணிக்கான கேப்டனாக ஜீவா, 'சேலம் சீட்டாஸ்' அணிக்கான கேப்டனாக ஆர்யா, "திருச்சி டைகர்ஸ்" அணிக்கான கேப்டனாக சிவகார்த்திகேயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த விளையாட்டு முறை 'ஹாங்காங்க் 6' என்று அழைக்கப்படும். ஆறு விளையாட்டு வீரர்கள், ஆறு ஓவர்களாக இது இருக்கும்.
வருகிற 17-ம் தேதி இந்த ‘நட்சத்திர கிரிக்கெட்' விளையாட்டுப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறவுள்ளது. இதில் நடிகர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள் ளனர். தற்போது அணியின் கேப்டன் கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள் ளனர். அணியில் யார் யார் விளையாடுகிறார்கள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அணியின் அறிமுக விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் கருணாஸ், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT