Published : 18 Apr 2016 01:55 PM
Last Updated : 18 Apr 2016 01:55 PM
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வடிவேலு பங்கேற்காதது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போட்டியில் பாண்டவர் அணி சார்பில் தீவிரமாக பணியாற்றிய வடிவேலு, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை.
தனியார் தொலைக்காட்சியின் நடிகர் சங்க கட்டிடத்திற்கான நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வடிவேலு, நடிகர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும், சூரிக்கு முக்கியத்துவம் அளித்தது வடிவேலுவுக்கு பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வடிவேலு ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, "வடிவேலுக்கு அவரது அம்மா மீது அதிக பாசம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், அவரது அம்மாவுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது.
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் வடிவேலுவின் நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தன. ஆனால் அம்மாவிற்கு ஏற்பட்ட திடீர் உடல்நிலை கோளாறால் சனிக்கிழமை இரவு மதுரை வந்துவிட்டார். அன்று அவர் சென்னையிலேயே இல்லை. அவர் மதுரை வருவதற்கு முன்பு நாசர், விஷால் உள்ளிட்ட அனைவரிடமும் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறிவிட்டே கிளம்பினார்.
மற்றபடி எந்தவொரு நடிகருடன் வடிவேலுவுக்கும் கருத்து வேறுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT