Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM
வாய் பேசாத, காது கேளாத ஓவியர் கதாபாத்திரத்தில் ‘நிசப்தம்’ படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது ஓடிடியில் வெளியான அப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு, அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் 40-வது பிறந்தநாளை கொண்டாடிய அனுஷ்கா, தனது 48-வது படத்தை இயக்கும் வாய்ப்பை மகேஷ்பாபு என்ற புதுமுக இயக்குநருக்கு கொடுத்துள்ளார்.
இது 4 மொழிகளில் தயாராகிறது. பிரபாஸ் நடித்த ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்த யூவி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இதே நிறுவனத்தின் தயாரிப்பில் அனுஷ்கா நடித்த ‘பாகமதி’ திரைப்படம் 4 மொழிகளில் வெளியாகி அதிக வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT