Published : 10 Oct 2021 03:57 PM
Last Updated : 10 Oct 2021 03:57 PM

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: டப்பிங் பணிகள் தொடக்கம்

சென்னை

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது முதல் பாகத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் மணிரத்னம். இதனை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டப்பிங் பணிகளுக்கு இடையே, கிராபிக்ஸ் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், விக்ரம் பிரபு, அஸ்வின், விஜய் யேசுதாஸ், லால், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி, ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜுன் சிதம்பரம், வினோதினி, பாலாஜி சக்திவேல், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு வடிவமைப்பாளராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x