Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

வண்டலூரில் சிங்கம், யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

சென்னை

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பார்வையாளராக வந்து விலங்குகளைப் பார்ப்பதோடு மட்டுமின்றி, இங்குள்ள விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர், அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்புச் செலவை அளிக்கலாம். செலவிடும் தொகைக்கு வரிவிலக்கும் உண்டு. பூங்காவை இலவசமாக சுற்றிப் பார்த்தல் போன்றசலுகைகளும் வழங்கப்படுகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயன் இங்குள்ள ‘விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், ‘பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாதங்களுக்கு தத்தெடுப்பதாக அறிவித்துள்ளார். அவருக்குவிலங்குகள் மீதுள்ள அக்கறையையும், ஆர்வத்தையும் இது காட்டுகிறது.

ஏற்கெனவே 2018 முதல் 2020 வரை ‘அனு' என்றவெள்ளைப் புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x