Last Updated : 23 Feb, 2016 08:38 PM

 

Published : 23 Feb 2016 08:38 PM
Last Updated : 23 Feb 2016 08:38 PM

அம்மா கணக்கு படப்பிடிப்பு நிறைவு

தனுஷ் தயாரித்த 'அம்மா கணக்கு' படத்தின் முழு படப்பிடிப்பையும் மிகக் குறுகிய காலத்தில் முடித்துவிட்டார்கள்.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.

சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.

இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (பிப்ரவரி 23) முடிவடைந்தது. இதனை படக்குழு அறிவித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x