Published : 09 Jul 2021 04:57 PM
Last Updated : 09 Jul 2021 04:57 PM

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா

சென்னை

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கவுள்ளார்.

'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'ஹர ஹர மஹாதேவகி', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இதனைத் தொடர்ந்து 'புலனாய்வு', 'தீமைதான் வெல்லும்' ஆகிய படங்களை இயக்கவிருந்தார். ஆனால், அது திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கு சமயத்தில் முழுமையாக கமர்ஷியல் கதை ஒன்றை சந்தோஷ் பி.ஜெயக்குமார் எழுதி முடித்துள்ளார். தற்போது அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார். இதனை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தின் நாயகனாக பிரபுதேவா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது பிரபுதேவாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x