Published : 27 Dec 2015 12:25 PM
Last Updated : 27 Dec 2015 12:25 PM
சென்னைக்கு ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பை முன்னுறுத்தி தயாராகி இருக்கும் பாடல் மூலமாக இயக்குநராக உருவாக இருக்கிறார் நடிகர் விக்ரம்.
'10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் இயக்குநர் திரு ஆகியோர் படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். ஜனவரி முதல் வாரத்தில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. நயன்தாரா, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.
இந்நிலையில், டிசம்பரில் சென்னையை கடுமையாக வெள்ளம் பாதித்தது. மக்கள் பலரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து சென்னை சகஜ நிலைக்கு மீண்டும் திரும்பி கொண்டிருக்கிறது.
கடுமையான வெள்ள பாதிப்பிலும், சென்னை மக்கள் எவ்வாறு மீண்டு எழுந்தார்கள் என்பதைக் கூறும் வகையில் பாடல் ஒன்று தயாராகி இருக்கிறது. அப்பாடலை இயக்க இருக்கிறார் விக்ரம்.
இப்பாடலை சென்னையின் முக்கிய இடங்களில் படமாக்குவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்.
இப்பாடலில் தோன்ற தனது திரையுலக நண்பர்கள் பலரிடமும் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார் விக்ரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT