Published : 19 Nov 2015 03:57 PM
Last Updated : 19 Nov 2015 03:57 PM
ஜீவா நடித்துவரும் 'போக்கிரி ராஜா' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் சிபிராஜ். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் 'போக்கிரி ராஜா' படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருக்கிறது.
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திருநாள்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்தைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் 'போக்கிரி ராஜா' படத்தில் நடித்து வருகிறார் ஜீவா. நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் சிபிராஜ் நடித்து வருவதாக படக்குழு அறிவித்தது.
"இப்படத்தில் சிபிராஜ் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் அவருடைய உடல்மொழி அனைவரையும் கவரும் வகையில் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். மேலும், கண்டிப்பாக சிபிராஜுக்கு இது ஒரு முக்கியமான படமாகவும் இருக்கும்" என்று படக்குழுவில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT