Last Updated : 30 Nov, 2015 12:20 PM

 

Published : 30 Nov 2015 12:20 PM
Last Updated : 30 Nov 2015 12:20 PM

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

2016ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னை மற்றும் கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகள் ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

சிம்பு நடித்து வரும் 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் சூர்யா நடித்திருக்கும் '24' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருடைய இசையில் வெளியாகி இருக்கும் 'தமாஷா' படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமீப காலமாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை. தனியார் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்ட போது அதற்கான இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னை மற்றும் கோவையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், "நாட்கள் நகர்ந்தது, நேரம் வந்துவிட்டது. பொங்கல் பண்டிகை நாளை அடுத்து சென்னை, கோவையில் ஒரு தமிழ் இசைத் திருவிழா" என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x