Published : 13 May 2020 10:11 PM
Last Updated : 13 May 2020 10:11 PM

இணையத்தில் வைரலான சண்டைக் கலைஞர்கள் வீட்டிலிருந்தவாறு உருவாக்கியுள்ள சண்டைக்காட்சி

சண்டைக் கலைஞர்கள் வீட்டிலிருந்தவாறு உருவாக்கியுள்ள சண்டைக்காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் மார்ச் 19-ம் தேதியிலிருந்து எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சுமார் 52 நாட்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே அனுமதியளித்து உள்ளது தமிழக அரசு. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதனிடையே படப்பிடிப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பெப்சி அமைப்பு உதவிகள் செய்துள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நிதியுதவியாகவும், பொருளுதவியாகவும் உதவி செய்துள்ளனர்.

தற்போது கரோனா ஊரடங்கில் சமூக இடைவெளி கடைப்பிடித்து பல்வேறு குறும்படங்கள் படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துமே வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இன்று (மே 13) காலை சண்டைக் கலைஞர்கள் உருவாக்கியுள்ள வீடியோ தான் சமூக வலைதள ட்ரெண்ட்டாக இருக்கிறது.

என்னவென்றால், அனைவருமே வீட்டிலிருந்தவாறு படத்தின் சண்டைக் காட்சி போன்றே வடிவமைத்து படமாக்கியுள்ளனர். இதில் முக்கியமான சண்டைக் கலைஞர்கள் அனைவருமே நடித்துள்ளனர். இந்தப் படமாக்கல் முறை அனைவரையும் கவர்ந்துள்ளது. பலரும் இந்த வீடியோவுக்கு சண்டைக் கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோவைக் காண:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x