Published : 13 Jan 2020 12:16 PM
Last Updated : 13 Jan 2020 12:16 PM

'ஒத்த செருப்பு' ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது வேதனையாயிருக்கு.. பார்த்திபன்

விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த தனது படைப்பு 'ஒத்த செருப்பு சைஸ் 7' திரைப்படம் ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது வேதனையளிப்பதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, அவர் நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்ட சித்தர் விழா நிறைவு நாளில் பங்கேற்றார்.

அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, " ‘ஒத்த செருப்பு’ படத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் எடுத்திருக்கிறேன். அந்தப் படத்துக்கு சர்வதேச அளவில் பல தளங்களில் இருந்து பாராட்டுகள் குவிந்திருக்கின்றன. பல விருதுகளையும் அந்தப் படம் வென்றிருக்கிறது. அப்படிப்பட்ட படைப்பை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பவில்லை என்பது வேதனையாக இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டு நிகழ்வுகளைப் பார்க்கும்போது நாடு அலங்கோலமாக உள்ளதாகத் தோன்றுகிறது. இத்தகைய சூழலை சமாளிக்க அன்பு மட்டுமே தேவை" என்றார்.

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் ஒலி மட்டுமே கேட்கும். இந்தத் திரைப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x