Published : 04 Jan 2020 12:18 PM
Last Updated : 04 Jan 2020 12:18 PM
தனது நடிப்பில் உருவாகும் 44-வது படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.
'பட்டாஸ்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டார் தனுஷ். இதில் 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படம், தனுஷ் நடிப்பில் உருவாகும் 41-வது படமாகும். இந்தப் படத்தை தாணு வருகிறார். இதனைத் தொடர்ந்து 42-வது படத்தை செல்வராகவனும், 43-வது படத்தை ராம்குமாரும் இயக்கவுள்ளனர்.
ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ தனுஷின் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது அதன் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்துள்ளார் தனுஷ்.
சன் பிக்சர்ஸ் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் தனுஷ். அதை இயக்கவுள்ளார் மித்ரன் ஜவஹர். இவர் தனுஷுக்கு நெருங்கிய நண்பராவார். தனுஷ் நடிப்பில் வெளியான 'யாரடி நீ மோகினி', 'குட்டி' மற்றும் 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மித்ரன் ஜவஹர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 படங்களை முடித்துவிட்டுத்தான் இந்தப் படத்துக்கு வரவுள்ளதால், இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT