Published : 16 Dec 2019 03:54 PM
Last Updated : 16 Dec 2019 03:54 PM

மறுதணிக்கைக்குச் சென்று தலைப்பைப் பெற்ற படக்குழு

'சைக்கோ' படத்தின் தலைப்புக்குத் தணிக்கைக் குழுவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மறுதணிக்கைக்குச் சென்று பெற்றுள்ளது படக்குழு.

'கண்ணே கலைமானே' படத்தைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின். டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம்புலி, 'ஆடுகளம்' நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் படத்தின் தலைப்புக்குக் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். அதனை மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள். ஏனென்றால், மனநல பாதிப்பு தொடர்பான தலைப்புக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனால், மறுதணிக்கைக்குச் சென்றது 'சைக்கோ' படக்குழு. அங்கு படத்தின் தலைப்புக்கு அனுமதியளித்துள்ளதாகவும், என்ன தணிக்கை என்பது இன்னும் முடிவாகவில்லை எனவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

முன்னதாக, ராஜ்குமார் ராவ் - கங்கணா ரணாவத் இணைந்து நடித்த படத்துக்கு முதலில் 'Mental Hai Kya' என்று தலைப்பிட்டு இருந்தனர். பலரும் ஆட்சேபம் தெரிவிக்கவே இறுதியில் 'Judgementall Hai Kya' என்ற தலைப்பில் அந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x