Published : 01 Nov 2019 03:02 PM
Last Updated : 01 Nov 2019 03:02 PM

உத்தர காண்டம்!

ராமாயண இதிகாசக் கதையை மையமாகக் கொண்டு ‘உத்தர காண்டம்’ என்ற புதிய மொழிபெயர்ப்புத் தொடரை கலர்ஸ் தமிழ் சேனல் வரும் வாரம் முதல் ஒளிபரப்புகிறது.

ராமாயணக் காப்பியத்தில் வரும் ஸ்ரீராமர் - சீதாதேவியின் கதை, அவர்களது நற்பண்புகள், 14 ஆண்டு வனவாசத்துக்கு பிறகு அவர்கள் அயோத்தி திரும்புவது, அங்கு நடக்கும் விழாக்கள், அதனால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றை விவரிக்கும் காட்சிகள் இதில் இடம்பெறுகின்றன.

ராமரின் இரட்டைக் குழந்தைகளான லவ-குசா ஆகியோர் தங்கள் தந்தையின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் தேடல், அவர்களது வீரதீர சாகசங்கள், தங்கள் பெற்றோரை மீண்டும் சேர்த்துவைக்கும் அவர்களது பயணம் என சுவாரஸ்ய திருப்பங்களுடன் நகர்கிறது இத்தொடர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x