Published : 12 Aug 2019 10:40 AM
Last Updated : 12 Aug 2019 10:40 AM

திங்கள் முதல் வெள்ளி வரை ஆபிஸ்

சன் டிவியில் ‘தேவதை’ தொடரில் நடிப்பு, புதுயுகம் சேனலில் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி தொகுப்பு என்று சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த பிரியா மகாலட்சுமி திடீரென ஆபீஸ் பேக், ஃபைல், டிபன் கேரியர் என்று முழு நேர அலுவலகவாசியாக தனது கேரியரை தொடங்கியுள்ளார்.

‘‘எனக்கு மருத்துவத் துறையில் நிதி பிரிவில் 11 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் உண்டு. அந்த பக்கம் ஒரு வட்டம் அடித்துவிட்டுதான் சேனல் பக்கம் வந்தேன். அந்த அனுபவத்தில்தான் இப்போது மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்துள்ளேன். ஒரு தனியார் மருத்துவமனையின் நிதிப் பிரிவில் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளேன். திங்கள் முதல் வெள்ளி வரை ஆபீஸ்..

மற்ற நாட்கள், விடுமுறை நாட்களில் டிவி நிகழ்ச்சிகள், ஈவென்ட்ஸ் போன்ற வேலைகளை தொடங்க உள்ளேன். நல்ல சீரியல் கதைகளுக்கான வேலைகளும் நடந்து வருகின்றன. யூ-டியூப் வழியே சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திட்டமும் உள்ளது. என் கணவர் ஷான் ஓர் இயக்குநர் என்பதால் சினிமா, சீரியல் கதை, திரைக்கதைன்னு எப்பவும் கிரியேட்டிவ் சம்பந்தமா வேலை செய்துட்டே இருப்பார். அவரது பணிகளுக்கும் பக்கபலமாக இருக்கேன்’’ என்கிறார் பிரியா மகாலட்சுமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x