Published : 05 Aug 2019 07:48 AM
Last Updated : 05 Aug 2019 07:48 AM

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி: ரஜினி

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று 'தர்பார்' படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இதன் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது. தற்போது இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டு நேற்றிரவு (ஆகஸ்ட் 4) சென்னை திரும்பினார் ரஜினி. அப்போது சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் "தனது ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சியளிக்கிறது. 'தர்பார்' படம் நன்றாக வந்துள்ளது. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் எப்போது கலந்து கொள்வார் என்பது தெரியவரும். லைகா நிறுவனம் தயாரித்து வரும் 'தர்பார்' படத்தில் நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, ப்ரதீக் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

'கோமாளி' ட்ரெய்லரில் ரஜினியின் அரசியல் வருகைக் குறித்த பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில், ரஜினி சென்னைக்குத் திரும்பியிருப்பது முக்கியமாக கருதப்படுகிறது. இந்தச் சர்ச்சைத் தொடர்பாக ரஜினி ரசிகர்கள் படக்குழுவினரை கடுமையாக சாடி வருகிறார்கள். மேலும், கமலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x