Published : 19 Jul 2019 08:46 PM
Last Updated : 19 Jul 2019 08:46 PM
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு தான் வெளியாகும் என அறிவிப்பு.
'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' கதையைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இதனிடையே தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
'வானம் கொட்டட்டும்' என்ற தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை 'படைவீரன்' படத்தின் இயக்குநர் தனா இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத் குமார், ராதிகா சரத்குமார், அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகியோர் நடிக்கவுள்ளனர். பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, ஒளிப்பதிவாளராக ப்ரீதா, கலை இயக்குநராக கதிர், எடிட்டராக சங்கதமிழன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, 2020-ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT