Published : 25 Mar 2015 05:02 PM
Last Updated : 25 Mar 2015 05:02 PM

சிம்ஹாவை சிறப்பிக்கும் ஜிகர்தண்டாவில் இடம்பெறாத காட்சி

'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் 'அசால்ட்' சேது என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக, நடிகர் பாபி சிம்ஹாவுக்கு செவ்வாய்க்கிழமை சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 'ஜிகர்தண்டா' இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்து சிம்ஹாவை வாழ்த்தும் வகையில் ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார்.

தற்போது பாபி சிம்ஹாவை கவுரப்படுத்தும் வகையில், 'ஜிகர்தண்டா' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றினை பதிவேற்றியுள்ளனர். அசலாக வெளியான பதிப்பின் இறுதிக் காட்சிக்குப் பிறகு, ஆற்றங்கரை ஒன்றில் தனது கூட்டாளிகளுடன் உட்கார்ந்து, 'தான் ஒரு கலைஞன்' என சேது பாத்திரம் சிலாகிப்பதைப் போல இந்த காட்சி அமைக்கப்பட்டுள்ளது. | வீடியோ பகிர்வு கீழே |

அசால்ட் சேது பாத்திரத்தின் மாற்றம், அசல் பதிப்பில் இருந்ததை விட, இந்தக் காட்சியில் இன்னும் தெளிவாகத் தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்கள் நினைப்பது என்ன?

அந்தக் காட்சி: