Published : 07 Jan 2015 09:33 AM
Last Updated : 07 Jan 2015 09:33 AM
பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று நடத்த திட்டமிட்டிருந்த ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கத்தினர் இன்று (7-ம் தேதி) அகில இந்திய அளவில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, டெல்லியில் மத்திய தலைமை தொழிலாளர் ஆணையர் தலைமையில், வங்கி ஊழியர் சங்கங்களுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, நேற்று மும்பையில் இந்திய வங்கிகள் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுகுறித்து, இப்பேச்சுவார்த்தையில்
பங்கேற்ற அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், ஊதிய உயர்வை 11 சதவீதத்தில் இருந்து 12.5சதவீதமாக உயர்த்தித்தர வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. இதனையடுத்து வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT