Published : 06 Jul 2019 11:19 AM
Last Updated : 06 Jul 2019 11:19 AM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்க ஆயுத்தமாகி வருகிறது படக்குழு.
வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்', துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் 'அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், செல்வராகவன், ராம்குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் எது முதலில் தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது.
தற்போது ஆகஸ்ட் மாதத்தில் கார்த்திக் சுப்பராஜ் படத்தைத் துவங்க ஆயுத்தமாகி வருகிறார்கள். இதற்கான நடிகர்கள் ஒப்பந்தம், படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் ஆகியவை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தேர்வு செய்ய தான் இவ்வளவு நாட்கள் ஆனது. தற்போது லண்டனில் படப்பிடிப்பு என்பதை படக்குழு முடிவு செய்துவிட்டதால், அங்குள்ள நடிகர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது படக்குழு.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தான், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT