Last Updated : 06 Jul, 2019 11:19 AM

 

Published : 06 Jul 2019 11:19 AM
Last Updated : 06 Jul 2019 11:19 AM

ரஜினி - கமல் இருவரையும் இணைத்து படம் பண்ண ஆசை: அக்‌ஷரா ஹாசன்

ரஜினி - கமல் இருவரையும் இணைத்து படம் பண்ண ஆசை இருப்பதாக அக்‌ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அபி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கடாரம் கொண்டான்'. கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. ஜுலை 19-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

'கடாரம் கொண்டான்' படத்தை விளம்பரப்படுத்த பத்திரிகையாளர்களை சந்தித்தார் அக்‌ஷரா ஹாசன். அப்போது 'ரஜினி - கமல் இணைத்து படம் இயக்க ஆசையிருக்கிறதா' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அக்‌ஷரா, “நடிக்க வந்துவிட்டேன். இப்போது இயக்கத்தைத் தாண்டி நடிப்பின் மீது காதல் வந்துவிட்டது.

அப்பாவை இயக்குவேனா என்று இப்போதே சொல்ல முடியாது. அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் மகிழ்ச்சி. அப்பாவும் அனைத்து விதமான படங்களிலும் நடித்துவிட்டார். அது தான் பிரச்சினை. ஆகையால் என்ன மாதிரியான கதைகள் யோசித்தாலும், அதில் நடித்திருப்பார்.

அப்பவை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ படம் பண்ண ஆசை. முதலில் அவரே ஒரு சூப்பர் ஹீரோ தான். ரஜினி சார் - அப்பா இருவரும் இணைந்து நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஆகையால், இருவரையும் இணைத்து படம் பண்ணலாம் என்று ஆசை” என்று தெரிவித்துள்ளார் அக்‌ஷரா ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x