Last Updated : 02 Jul, 2019 11:34 AM

 

Published : 02 Jul 2019 11:34 AM
Last Updated : 02 Jul 2019 11:34 AM

முடிவுக்கு வந்த எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பு சர்ச்சை

சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு 'எங்க வீட்டுப் பிள்ளை' என்று தகவல் வெளியானதற்கு, விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

’Mr.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து, மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படம் என மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, யோகி பாபு, அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு 'எங்க வீட்டுப் பிள்ளை' என்று செய்திகள் பரவியது. ஆனால், படக்குழுவினரோ இதனை மறுத்தனர். இருப்பினும் தொடர்ச்சியாக 'எம்.ஜி.ஆர் படத்தலைப்பில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம்' என்று செய்தி மட்டும் வெளியாகிக் கொண்டே இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் தலைப்பு உரிமையை வைத்திருக்கும் விஜயா புரொடக்‌ஷன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை' உட்பட எங்கள் நிறுவனம் தயாரித்துள்ள அனைத்து படங்களின் தலைப்புகளின், உரிமைகளையும் இதுவரை வேறு நபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ வழங்கவில்லை. இதுகுறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடிதம் மூலம் தலைப்பு உரிமை காப்பு கோரி நமது சங்கங்களுக்கு கடிதம் கொடுத்துள்ளோம். அதே நிலை தொடர்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x