Published : 05 Jul 2019 07:21 AM
Last Updated : 05 Jul 2019 07:21 AM
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விமல், மதுமிதா, ஷைலஜா, பிரியா, பிரியங்கா ஆகியோரது நடிப்பில் ஒளிபரப்பாகும் தொடர் ‘பிரியாத வரம் வேண்டும்’. இது கடந்த காலம், நிகழ்காலம் என இரு காலங்களைக் கடந்து பயணிக்கும்.
1600-களில் நடப்பதாக சித்தரிக்கப்படும் கதையில், சுந்தரமதி நாட்டின் இளவரசன் மாதேவனும், சிற்பி மகள் அமராவதியும் குடும்பத்தின் தீய சக்திகளால் பிரிக்கப்படுகின்றனர். விதி இருவரையும் ஒன்றிணைக்க, நிகழ்காலத்தில் சென்னையைச் சேர்ந்த வளரும் நடிகராக ரிஷியும், ஊட்டி அருகே ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்கள் மனதை எளிதில் அறியும் குணாதிசயம் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் துர்காவும் நடிக்கின்றனர்.
இதுபற்றி ஜீ தமிழ் சேனல் தென்மண்டல தலைவர் சிஜு பிரபாகரன் கூறும்போது, ‘‘இத்தொடருக்காக, தென் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் முதன்முறையாக சென்னை இவிபி ஃபிலிம் சிட்டியில் 17,000 சதுர அடியில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிஜிஐ ஸ்பெஷல் எஃபெக்ட்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட அரங்கம், மாறுபட்ட, தரமான முறையில் கதை சொல்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ‘பிரியாத வரம் வேண்டும்’ தொடரின் ஒளிபரப்பு இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT