Published : 30 Jun 2019 12:12 PM
Last Updated : 30 Jun 2019 12:12 PM
‘’மாதவன் மகா கலைஞன். ஆனா, நடனமாடச் சொன்னா கோபம் வந்துரும். நடனமாடப் பயப்படுவாரு’’ என்று சீமான் தெரிவித்தார்.
இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், தனியார் இணையதளச் சேனலுக்குப் பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
‘’இயக்குநர் பாரதிராஜா, சிவாஜி அப்பாவிடம் கதை சொல்ல என்னை அனுப்பிவைத்தார். கதை சொன்னேன். ஆரம்பத்தில் தலையாட்டி, சிரித்து, ரசித்துக் கேட்டவர், இடைவேளைக்குப் பிறகு இறுகிய முகத்துடன் கேட்டார். சொல்லி முடித்ததும், ‘நல்லாருக்குடா நல்லாருக்குடா’ என்று பாராட்டினார். அதுதான் ‘பசும்பொன்’ திரைப்படம்.
இந்தப் படம் சரியாப் போகலை. ஆனாலும் பிரபு, ‘அடுத்த படம் பண்ணுவோம்’னு சொல்லி வாய்ப்புக் கொடுத்தார். அதுதான் நான் இயக்கிய முதல் படம் ‘பாஞ்சாலங்குறிச்சி’. அதுக்குப் பிறகு ஒரு கதையை தயார் பண்ணி எல்லா நடிகர்கள்கிட்டயும் சொன்னேன். எல்லாரும் கதையைக் கேட்டு நல்லாருக்குன்னு சொன்னாங்க. ஆனா நடிக்க மட்டும் வரலை.
இந்த சமயத்துலதான், இயக்குநர் மனோபாலா அண்ணன் ஒருநாள் கூப்பிட்டுவிட்டாரு. கதையைக் கேட்டாரு. ‘நல்லாத்தானே இருக்கு’ன்னு சொன்னவர், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார்கிட்ட சொல்லிவிட்டார். அவர் கதையைக் கேட்டுட்டு, ‘மாதவன் ஓகேயா?’ன்னு கேட்டார். அப்புறம் மாதவன் வந்தார். வேறொரு தயாரிப்பாளர் படத்தைப் பண்ணினார். அதுதான் ’தம்பி’ திரைப்படம்.
இந்தப் படத்தில், மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மாதவன். அவர் பெரிய அதலெட்டிக். அதனால, ஓடுகிற காட்சிகளெல்லாம் ஸ்டைலாக ஓடினார். உணர்வுகளை வெளிப்படுத்துகிற போதெல்லாம் முகத்தில் அப்படியே கொட்டிவிடுவார். மருத்துவமனையில் இருக்கிற காட்சியில், கண்ணில் இருந்து கண்ணீர் வரும் காட்சியில், கிளிசரின் இல்லாமலேயே அழுகையை வெளிப்படுத்தினார்.
ஆனால், நடனமாடச் சொன்னால் மட்டும் டென்ஷனாகிவிடுவார். நடிப்பதற்கு பயப்படமாட்டார். சண்டைக் காட்சிக்குக் கூட பயப்பட மாட்டார். ஆனால் ,நடனம் என்றாலே பயப்படுவார். மற்றபடி, மாதவன் மகாகலைஞன். எந்தக் கதாபாத்திரமென்றாலும் தன் நடிப்பால் தனித்துத் தெரியும் அளவுக்கு பிரமாதப்படுத்திவிடுவார்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT