Published : 18 Aug 2017 05:56 PM
Last Updated : 18 Aug 2017 05:56 PM
சசிகுமார் நடிப்பில் உருவாகி வந்த 'கொடி வீரன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் 'கொடி வீரன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. செப்டம்பரில் வெளியிடலாம் என தீர்மானித்திருக்கிறார்கள்.
விதார்த், பூர்ணா, மஹிமா நம்பியார், சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் சசிகுமாருடன் நடித்துள்ளார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துவந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். சசிகுமார் தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
'கொடி வீரன்' படத்தைத் தொடர்ந்து, யாருடைய இயக்கத்தில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT