Published : 14 Jul 2017 11:59 AM
Last Updated : 14 Jul 2017 11:59 AM
2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவித்த முதல்வர் பழனிசாமிக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருதுகள், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 ஆகிய 6 ஆண்டுகளுக்கான விருதுகளுக்கு தேர்வு செய்வதற்கான தேர்வுக்கு குழு, ஓய்வுபெற்ற நீதிபதி எ.ராமன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக் கான திரைப்பட விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி நேற்று அறிவித்தார்.
இந்த விருதுகள் அறிவிப்புக்கு தமிழக அரசுக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''எங்களது திரைத்துறையினரின் பல கோரிக்கைகளில் மிகப்பெரிய ஒன்றான தமிழ்த் திரைப்படங்களுக்கான மானியம் மற்றும் தமிழக அரசின் விருது ஆகியவற்றினை பரிசீலனை செய்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்திலும், வழிகாட்டுதழிலும் செயல்படும் தங்களது அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் திரைப்படங்களுக்கான மானியத்தொகை வழங்குதல் மற்றும் 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ்த் திரைப்படங்களுக்கு தமிழக அரசால் திரையுலகினரை பெருமையடைய செய்யும் மாநில அரசு விருதுகள் வழங்கு அறிவிப்பானது தமிழ்த் திரையுலகினரிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எங்களது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவும் ஒட்டுமொத்த திரையுலகினரின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று விஷால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT