Last Updated : 19 Jan, 2017 05:11 PM

 

Published : 19 Jan 2017 05:11 PM
Last Updated : 19 Jan 2017 05:11 PM

ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமருக்கு இயக்குநர் வெங்கட்பிரபு கேள்வி

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் வெங்கட்பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் ஒன்றிணைந்து இப்போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக உருமாறியுள்ளது.

இப்போராட்டத்தை முன்வைத்து பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு இயக்குநர் வெங்கட்பிரபு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "பிரதமரே, பணமதிப்பு நீக்கத்தை அமல்படுத்தும் போது ஒவ்வொரு நாளும் புதிய சட்டத்தை உருவாக்கினீர்கள். ஆனால் இப்போது ஜல்லிக்கட்டுக்காக உடனடியாக சட்டத்தை மாற்ற எதுவும் செய்ய முடியாது என்கிறீர்கள். யாரிடம் விளையாடுகிறீர்கள்?" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்பிரபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x