Published : 14 Feb 2017 12:38 PM
Last Updated : 14 Feb 2017 12:38 PM
ஜெயலலிதாவின் மறைவுக்கும் சசிகலா பதில் சொல்ல வேண்டும் என்று கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
ஜெயலலிதா மறைவிலிருந்தே தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் கவுதமி. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, "சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார். அவர் 'அம்மாவின்' மறைவுக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இரண்டு வழக்குகளுக்கும் சரிசமமான தீர்ப்பு சரியாகாது.. அம்மாவுக்கான நியாயம் வேண்டும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கவுதமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT